குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்க தென் கொரியா, விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவின் பியோங்சாங்கில் நடைபெறுகிறது. இதில் வடகொரியாவும் பங்கேற்க வேண்டும் என்று தென்கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபரும் இதை ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கொடுத்துள்ளார். இதையடுத்து இருநாடுகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தை, வரும் 9ம் தேதி அன்று இருநாட்டு எல்லையில் உள்ள பன்முஞ்சோம் பகுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *