குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள கட்சி சார்பில்,. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் காணமால் போன மீனவர்களை விரைந்து தேடி கரை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஓக்கி புயல் மற்றும் கனமழை காரணமாக பலியான மீனவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை 50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் விவசாய நிலங்களின் சேதங்களை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், குமரிமாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கடலோர காவல்படை மையம் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *