குஜராத் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்கிறார் விஜய் ரூபானி; வரும் 26ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு…..

குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி மீண்டும் வரும் 26ம் தேதி பொறுப்பேற்கிறார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து ஏற்கெனவே முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானியே அப்பதவியில் தொடர்வார் என பாஜக அறிவித்தது. துணை முதலமைச்சராக இருந்த நிதின் பட்டேலும் அதே பதவியில் தொடர்வார் என அருண் ஜேட்லி அறிவித்தார். இந்நிலையில், இவர்களின் பதவிஏற்பு விழா வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி நகர் சச்சிவாலயா மைதானத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *