காமராசர் சிலைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தபோது, பாஜகவினர், காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல்

சேலத்தில் காமராசர் சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தபோது, பாஜகவினர், காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

சேலம் ஆனந்தா பாலம் அருகே உள்ள காமராசர் சிலைக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இதையொட்டிச் சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக கொடிகளைக் கட்டினர்.

இதனிடையே காமராசர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த காங்கிரஸ் கட்சியினர் பாஜக கொடிகளைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்துப் பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக்கொண்டனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையிலேயே பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *