விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3ஆம் தேதி முதல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.