ஒகேனக்கல்லில் நீரின் அளவு அதிகரிப்பு..! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கன அடியாக வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு, படிப்படியாக அதிகரித்து 2 மணி நிலவரப்படி 21 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *