உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

உலகின் முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை சயகா சாட்டோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பி.வி. சிந்து 21க்கு 13, 21க்கு 12 என்ற நேர் செட்களில் சயகா சாட்டோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *