லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் அமெரிக்க நாட்டின் தூதரக கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க, இந்திய ரூபாய் மதிப்பில் ஆறாயிரத்து 700 கோடி ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், முழுக்க முழுக்க அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்தன. இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தக் கட்டிடத்தை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017-12-15