உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று லீக் போட்டிகளிலும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபாரமாக விளையாடி, அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உலக சூப்பர் சீரிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, சீன வீராங்கனை சென் யு பையையுடன் மோதினார். இதில் முதல் செட்டை 21க்கு 15 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சிந்து சிறப்பாக விளையாடி 21க்கு 18 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினார். இதன்மூலம், சிந்து 21க்கு 15, 21க்கு 18 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை சென் யுபையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
2017-12-17