சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் கடை பிடிக்கப்பட்டிருந்ததால் அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆயிரத்து 990 ஆம் ஆண்டுகளில் இருந்தே பெண்ணுரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதிஅரேபிய அரசு நீக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா நாட்டின் போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரல் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *