உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்; கன்னியாகுமரியில் ஆய்வு செய்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி நேரில் வந்து பார்வையிடுவது அப்பகுதி மக்களுக்கு கூடுதல் ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டிய எழுச்சித்தமிழர், பாதிப்பு குறித்து சேத மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *