சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரிடம் நேரிலும் கடிதம் மூலமும் வலியுறுத்தினார் எனக் கூறினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து மத்திய அரசிடம் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்ட வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக கூறிய சி.வி.சண்முகம், உச்சநீதிமன்ற முழு அமர்வுதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை நிறைவேறும் என நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
2018-02-03