ஈரானுடன் பெட்ரோலியப் பொருட்கள் வர்த்தகத்தை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, இந்தியா போன்ற சில நாடுகளுக்கு இத்தடையில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
ஈரானிடம் வர்த்தகம் செய்து வரும் நாடுகளின் கருத்தை அறிய அதிபர் டிரம்ப் அனுப்பிய உயர் மட்டக்குழு, டெல்லியில் வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
நாட்டுக்குப் பலன் தரும் வழிமுறையையே விரும்புவதாக இந்தியாவின் நிலைப்பாடு என்று, அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கும்படியும் விஜய் கோகலே கேட்டுக் கொண்டுள்ளார்.