இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேர் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்.

கடந்த சில மாதங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 24பேர், காரைக்காலைச் சேர்ந்த 10பேர், ராமேஸ்வரத்தை சேர்ந்த 18பேர் என மொத்தம் 69பேர் கடந்த வாரம் இலங்கை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை இலங்கைக் கடற்படையினர் பன்னாட்டுக் கடல் எல்லையில் இந்தியக் கடலோரக் காவல்படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர். அவர்கள் கடலோரக் காவல்படையின் ரோந்துக்கப்பல் மூலம் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *