ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து மூன்றாவது இடத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய திமுக கொறடா சக்கரபாணி, வழக்கறிஞர் அணி செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக்குழு 31ம் தேதி தனது ஆய்வை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்குழு தனது ஆய்வை முடித்து திமுக தலைமையிடம் தனது அறிக்கையை அளித்தது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகரைச் சேர்ந்த 154 நிர்வாகிகளைப் பதவி நீக்கம் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2018-01-01