இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை கடந்த மார்ச் மாதம், தலைமைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதிமுகவின் சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் டிடிவி தினகரன் அணியினரும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. கடந்த 6-ஆம் தேதி, டெல்லி தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணையில், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் குற்றப்பின்னணி உடையவர்கள் எனவும், அவர்களுக்கு கட்சியில் மெஜாரிட்டி இல்லை எனவும் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். தரப்பில் வாதாடப்பட்டது. இதனையடுத்து, தினகரன் அணியினர், தங்கள் தரப்பு வாதத்தை வைக்க அவகாசம் கேட்டதை தொடர்ந்து, விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. இதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில் அமைச்சர்கள் சண்முகம், உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு தரப்பினர் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கை வரும் 23-ஆம் தேதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *