தமிழகத்தில் நாள்தோறும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியை சேர்ந்த சபரீஷ் என்பவர் கடந்த 4 நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சபரிஷ் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சரத் என்பவரின் மனைவி அஷ்வினி, கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஷ்வினி மரணமடைந்தார்.

இதேபோல், கிருஷ்ணகிரியின் அடுத்த சின்ன தாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவர் கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ரத்தப் பரிசோதனையில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *