இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வாய்ப்பு; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து….

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஜனநாயத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும் கந்துவட்டி கொடுமைகளை ஒழிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *