மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளதாகவும், மதுரை கொடியேற்ற நிகழ்ச்சியில் தவிர்க்க இயலாத காரணத்தால் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க முடியவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தின் ஒரு இலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும், மற்றொரு இலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் தெரிவித்தார்.
2017-11-26