68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 9ம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைதொடர்ந்து டிசம்பர் 18ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்த்து. இந்த தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் வீரபத்ரசிங் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தமது ராஜினாமா கடித்ததை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் புதிய அரசு பதவி ஏற்கும் வரை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
2017-12-20