இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அதன் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13ஆம் தேதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறவுள்ளது. பகல்-இரவு ஆட்டம் என்பதால் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் வடமாநிலங்களில் அதிக அளவில் குளிர் நிலவும் காரணத்தால் தரம்சாலா மற்றும் மொகாலி ஆட்டங்களில் 1.30 மணி என்றிருந்த தொடக்க நேரத்தை தற்போது 11.30 மணியாக பிசிசிஐ மாற்றியுள்ளது.
2017-11-20