இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஒடிசாவில் இன்று நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இதனைதொடர்ந்து இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது போலவே 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியால் டி20 தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *