அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருந்தாலும் அதனால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் முடிவடையாத நிலையில் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையோ, தாழ்வு பகுதியோ உருவாகததால் மழைப்பொழிவு இல்லை. இந்நிலையில், தெற்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இப்போதைக்கு தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள வானிலை மைய அதிகாரிகள், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *