ஆளுநர் அலுவலகம் அறிவிப்புக்கு தமிழக ஆம்ஆத்மிகட்சி கடும் கண்டனம்! – வசீகரன் அறிக்கை

ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது தண்டனைக்குரிய குற்றம் என ஆளுநர் அலுவலகம் அறிவிப்புக்கு தமிழக ஆம்ஆத்மிகட்சி கடும் கண்டனம்! மக்களால் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்ட இந்திய குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டு ஆளுநராக மாநிலங்களில்
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எதிர்க்கட்சிகள் ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிப்பது அரசியல் சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக மரபாகும்.

ஆனால், எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் சர்வாதிகார தொனியில் ஆளுநர் அலவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இது முற்றிலும் இந்திய ஜனநாயத்திற்கு எதிரானது, இப்படி ஆளுநர் அலுவலகம் செயல்படுவதை தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *