ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், ஆஃப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய இரு அணிகளையும், ஐ.சி.சியின் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க, ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகள் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இணைந்தன. இதனை அடுத்து, ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா உடன் 2019இல் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *