குளிர்காலம் தொடங்கிவிட்டதால் வட ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனி பொழிகிறது. சாலைகள், விமான நிலையங்களின் ஓடுதளங்கள், வீடுகள் ஆகியவை பனியால் மூடப்பட்டுள்ளன. பிர்மிங்காம் விமான நிலைய ஓடுதளம் முழுவதுமாக பனியால் மூடப்பட்டு விட்டதால், விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியிலும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஃப்ராங்ஃபர்ட் விமான நிலையத்தில் 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2017-12-12