அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்த விசாரணை டெல்லியில் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் உள்ள கல்லூரிகளில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன், ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகளில் பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்த விசாரணை டெல்லியில் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *