அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், பேச்சு வார்த்தை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.