அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை; முடிவு எடுக்காத நிலையில், பேச்சு வார்த்தை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், பேச்சு வார்த்தை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *