அமெரிக்க அமைப்பு சுட்டிக்காட்டிய குறைகள் பற்றி பரிசீலனை

அமெரிக்க விமான போக்குவரத்துறை கண்காணிப்பு அமைப்பின் பரிந்துரைகள் குறித்து, பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்திய விமான போக்குவரத்து துறையின் செயல்பாடுகளை, அமெரிக்க விமான போக்குவரத்துறையின் கீழ் இயங்கும், விமான நிர்வாக கூட்டமைப்பு தணிக்கை 2013ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாக செய்திருக்கிறது.

இதுதொடர்பாக, இந்திய விமான போக்குவரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னாட்டு விமான பாதுகாப்பு மதிப்பீட்டு அமைப்பின் செயல் திட்டத்தின்படி, அமெரிக்க விமான நிர்வாக கூட்டமைப்பு, இம்மாதம் 16 மற்றும் 20ஆம் தேதிகளில் தணிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில், விமானங்களின் இயக்கம், விமானங்களின் தரம், அதற்கான பிரத்யேக உரிமங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தணிக்கை நடைபெற்றதாக கூறப்பட்டிருக்கிறது. அதில், விமான இயக்க பாதுகாப்பில், சில குறைபாடுகள் இருப்பதாக கூறியிருப்பதாகவும், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும், இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *