புவி வெப்பமடைதலைத் தடுக்கும் வகையில் அனைத்து நாடுகளும் புகை மாசு வெளியீட்டைக் குறைத்துக் கொள்ள 2015ல் பாரிசில் உடன்பாடு எட்டப்பட்டது. இதில் அப்போதைய அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமாவும் கையெழுத்திட்டிருந்தார். புதிய அதிபராகப் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பாரிஸ் உடன்பாட்டில் அமெரிக்காவின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்துக் கடந்த ஆண்டு அதில் இருந்து வெளியேறினார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகளிலும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் மீண்டும் பாரிஸ் உடன்பாட்டுக்குள் அமெரிக்கா வரக்கூடும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2018-01-12