அமெரிக்காவின் நயகரா நீர்வீழ்ச்சி, தற்பொழுது, கடும் பனிப்பொழிவு காரணமாக முழுவதும் உறைந்து காணப்படுகிறது.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் நிறைந்துள்ளது. கடுமையான குளிரும் நிலவி வருவதால் அங்குள்ள ஏரிகள் உறைந்துக் காணப்படுகிறது. கனடா மற்றும் அமெரிக்காவின் மிக பிரபலமான நீர்வீழ்ச்சியான நயகரா நீர்வீழ்ச்சி கடும் பனிப்பொழிவு காரணமாக முழுவதுமாக உறைந்து காணப்படுகிறது. நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள மரங்கள் மற்றும் செடிகளும் உறைந்த நிலையில் இருக்கிறது. இந்த மாதம் பதிவாகியுள்ள -34 டிகிரி செல்சியஸ், நயகரா நீர்வீழ்ச்சி, முழுமையாக உறைந்ததற்கான காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப்பநிலை சரிவினால், அமெரிக்க மக்களின் சராசரி வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. உறைவெப்பநிலை காரணமாக உயிரிழப்புக்களும், எண்ணற்ற சாலை விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நயகராவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாதிப்படையவில்லை. ஐஸ்கட்டியாய் மாறிப்போன நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *