அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கழகங்கள் தங்களின் நிலையை இழந்துவருகின்றன என்று கூறினார். மேலும் அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்படுகிறது என்று கூறிய, பொன்.ராதாகிருஷ்ணன் திமுகவும் அதனை நோக்கி செல்வதாகக் தெரிவித்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான சலுகைகளை வழங்க அரசு தயாராக இருந்திருக்க வேண்டும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *