அடுத்த மாதம் இறுதிக்குள் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் விழும் என, அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கடந்த 2011 ம் ஆண்டு விண்வெளியில் டியாங்கோங்-1 என்னும் மிகப்பெரிய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை சீனா கட்டி முடித்தது. நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இது பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுவதற்காக சீனா ஏராளமான விண்வெளி வீரர்களை அனுப்பியது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வரும் இந்த டியாங்கோ-1 விண்வெளி நிலையம் அடுத்த மாதம் இறுதிக்குள் பூமியில் விழும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *