வியட்நாம் நாட்டை அடுத்தடுத்து புயல்கள் தாக்குவதால் மக்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

வியட்நாம் நாட்டில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு 72 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது கானூன் புயல் அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் புரட்டி போட்ட கனமழையால் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் பாதிப்பில் இருந்து மீளாத வியட்நாம் நாட்டை கானுன் புயல் நெருங்கி வருவதால், அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *