மகேந்திர சிங் தோனிக்கு இரண்டு தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டதால், அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடவில்லை என, இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடவுள்ள டி20 தொடரிலும் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இது அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதை உணர்த்துவதாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்புவதற்கான நபரை தேர்வு செய்யவே தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதாக விளக்கியுள்ளார். மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில், ரிசப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.