அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தென் கடலோர தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அடுத்த இரண்டு இரவுகள் உறை பனி தொடரும் என்றும், கடந்த ஒரு வாரமாக வால்பாறை பகுதியில் நிலவி இருந்த உறை பனி குறைந்துள்தாகவும் அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது. குறைந்தபட்சமாக உதகையில் 5.2 டிகிரி செல்சியஸ்-ம், கொடைக்கானலில் 9.9 டிகிரி செல்சியஸ்-ம், வெப்பம் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை எனவும், சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.