ஐரோப்பிய நாடுகளில் உறைபனியால் ரெட் அலர்ட் எச்சரிக்கை

பனிப்புயல், உறைபனி ஆகியவற்றைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உச்சகட்டமாக ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே அடுத்த சிலநாட்களில் பனி விழும் அளவு 6 அடி வரை இருக்கும் என்று ஜெர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள பனியை அகற்றுவதற்கு ராணுவத்தினரை ஈடுபடுத்த ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *