ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழகத்தில் இருந்து கிடைத்த கருத்துக்களைக் கொண்டுதான் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் ஆலையை திறக்க பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார். பொன் மாணிக்கவேல் தன்னுடன் பணியாற்றிய குழுவினருடன் இணைந்து சிலைகளை மீட்க இருப்பதாக தெரிவித்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமே தவிர இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.