ஸ்டெர்லைட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
வெளிநடப்புச் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், சட்டபேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்றாவது அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுப்பது குறித்து முதலமைச்சர் ஏதாவது தெரிவிப்பார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவ்வாறு ஏதும் தெரிவிக்காததால் வெளிநடப்புச் செய்ததாதகவும் கூறினார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை தி.மு.க. எதிர்ப்பதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், செல்வந்தனாக இருக்கும் ஒருவர் தொழில் ரீதியாக வறுமையடைந்துவிட்டால் அதனை ஏற்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.