நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்களின் நம்பிக்கையை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இந்த 2 கட்சிகளும் பல இடங்களில் 3வது மற்றும் 4வது இடத்தை பெற்றுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் சேரன் கூறுகையில் “மநீம 16.5 லட்சம் வாக்குகளும். நாம் தமிழர் 16.0 லட்சம் வாக்குகளும் பெற்று, 32.5 லட்சம் மக்கள் தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்கள். திமுகவும் அதிமுகவும் மக்களுக்கான பணியாற்றுவதிலும் சிறப்பாக செயல்படாமல் முன்னர் போலவே இருந்தால் நாம் தமிழரும், மநீமவும் இருபெரும் சக்திகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். மேலும் மநீம மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
2019-05-26