சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறும்பொழுது, மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் மக்களின் தீர்ப்பினை ஏற்றுக் கொள்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், 300 பூத்களில் அமமுக வாக்கு எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருக்கிறது. எங்கள் முகவர்கள் செலுத்திய வாக்குகள் கூடவா பதிவாகவில்லை என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு தேர்தல் ஆணையம் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும்தேர்தல் தோல்விக் குறித்து ஆராய வேண்டிய அவசியம் தற்போது இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து வரும் தேர்தல்களில் அமமுகவின் பலம் என்னவென்று தெரியும் கூறியுள்ளார்.