தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரசேகரராவ்

தெலுங்கானா முதலமைச்சராக சந்திரசேகரராவ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி 88 இடங்களைக் கைப்பற்றி மிகவும் வலுவான நிலையில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. ஹைதரபாத்தில் ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் முதலமைச்சராக சந்திரசேகர ராவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சந்திரசேகரராவ் பிற்பகல் 1.30 மணிக்கு பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜோதிடர்களின் அறிவுரையை அடுத்து பதவியேற்கும் நிகழ்ச்சி 4 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு 1 மணி 34 நிமிடத்துக்கு அவர் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் வேதியர்களைக் கொண்டு சிறப்பு சடங்குகளும் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *