உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரி பாய் பூலே பாஜகவில் இருந்து விலகியுள்ளார். 2014நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பரைச் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாவித்திரி பாய் பூலே. சமூகத்தைப் பிளவுபடுத்த பாஜக முயல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாட்டுக்குக் கோவில் தேவையில்லை என்றும், வேலையின்மை, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் சிக்கல்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் சாவித்திரிபாய் பூலே ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
2018-12-06