திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே லட்சுமிபுரம் அணைக்கட்டில் ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
லட்சுமிபுரம் அணைக்கட்டு நீரை நம்பி ஆயிரத்து 413 ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. மொத்தம் 6 மதகுகள் உள்ள இந்த அணைக்கட்டு 4 மீட்டர் உயரம் கொண்டது. தற்போது பெய்த மழையால் 3 மீட்டர் உயரம் தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில், தடுப்பணையில் ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. மேலும் பாசன கால்வாயிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் தடுப்பணை உடையும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கும் பொதுமக்கள், அரசு விரைவாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.