திருக்கோவிலூர் அருகே தலித் சிறுவன் கொலை! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்!

திருக்கோவிலூர் அருகே தலித் சிறுவன் கொலை! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயீ என்கிற விதவை பெண்மணி 8 வயது சிறுவன் 13 வயது மகள் கொடுரமாக தாக்கப்பட்டதில் அந்த மகள் கொல்லப்பட்டு இருக்கிறார். யும் மகனும் மருத்துவனையில் சிகிச்ச்சை பெற்று வருகின்றனர். அதன் பின்னனி இதுவரை கண்டறியவில்லை, அங்கே சாதி பிரச்சனையும், நிலப் பிரச்சனையும் தான் இதற்கு காரணம் என உன்னை அறியும் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து வழக்கமான காவல துறை விசாரிக்காமல் சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், இந்த கொடுரமான சம்பவத்தில் யாராக இருந்தாலும் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு வளியுறுத்துகிறேன். இது போன்று தலித் மக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி அனைத்து கட்சியையும் ஒன்றிணைத்து போராட்டமும் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *