பாஜக அரசின் அரசியல் காழ்புணர்ச்சிக்காக கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையை முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதன் காரணமாக, பாஜக அரசு பழி வாங்கும் நோக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கை சிபிஐ கைது செய்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே, சிதம்பரம் குடும்பத்தை தொடர்ந்து அச்சுருத்தி வந்த நிலையில், கார்த்த்தி சிதம்பரம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த போக்கை கண்டிக்கத்தக்கது. அரசியலில் பழிவாங்கும் நோக்கிற்காக சிபிஐ உபயோகிப்பது சரியல்ல என்றார். மேலும், தமிழகத்தின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் தமிழக அரசு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.