ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் நான்கு பேரையும் படகுடன் சிறைபிடித்து காங்கேசன்துறை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.