இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தின் நெமிலி, அரக்கோணம் தாலுகாக்கள் ஆகியவை, பெருநகர திட்டப்பகுதியின் எல்லைக்கு உட்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரத்து189 சதுர கிலோ மீட்டர் பரப்பாக இருந்த சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லைப் பரப்பு, 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லைப் பரப்பு சுமார் 7 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆயிரத்து 709 சிறு கிராமங்கள், சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள், சென்னைப் பெருநகர திட்டப்பகுதி விரிவாக்கம் குறித்து சம்மந்தப் பட்ட பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2018-02-06