இந்தோனேஷியாவில் அனாக் காரகட்டு என்ற எரிமலை ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்ட முறை சாம்பலையும், பாறைகளையும் உமிழ்ந்து வருகிறது.
இதன் சாம்பல் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. 1883ம் ஆண்டு அனாக் எரிமலை வெடித்துச் சிதறியதால் 36 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இந்த எரிமலை வெடிப்புதான் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பேரழிவு வெடிப்பு என்று குறிப்பிடப்படுகிறது. தற்போது ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.