ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய்வதற்கு ஆளுநரிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் தமிழக அரசு உறுதியுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.